சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.078
திருநாவுக்கரசர்
தேவாரம்
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=0q7NJVbvNjk |
4.079
திருநாவுக்கரசர்
தேவாரம்
தம் மானம் காப்பது ஆகித் பண் - திருநேரிசை (பொது -குறைந்த நேரிசை ) Audio: https://www.youtube.com/watch?v=MZTHaYJyPyE |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.078  
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர்
பண் - திருநேரிசை (திருத்தலம் பொது -குறைந்த நேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வென்றிலேன், புலன்கள் ஐந்தும்; வென்றவர் வளாகம் தன்னுள் சென்றிலேன்; ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன்; நின்று உளே துளும்புகின்றேன்; நீசனேன்; ஈசனேயோ! இன்று உளேன்! நாளை இல்லேன்!-என் செய்வான் தோன்றினேனே! | [1] |
கற்றிலேன், கலைகள் ஞானம்; கற்றவர் தங்களோடும் உற்றிலேன்; ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன்; பெற்றிலேன்; பெருந் தடங்கண் பேதையார் தமக்கும் பொல்லேன்; எற்று உளேன்? இறைவனே!-நான் என் செய்வான் தோன்றினேனே! | [2] |
மாட்டினேன், மனத்தை முன்னே; மறுமையை உணர மாட்டேன்; மூட்டி, நான், முன்னை நாளே முதல்வனை வணங்க மாட்டேன்; பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம் தன்னை; ஈட்டினேன்; களைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே! | [3] |
கரைக் கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் உரைக் கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன்; ஆதலாலே, அரைக் கிடந்து அசையும் நாகம் அசைப்பனே! இன்ப வாழ்க்கைக்கு இரைக்கு இடைந்து உருகின்றேன் என் செய்வான் தோன்றினேனே! | [4] |
செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன், தேவ தேவன், வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே! | [5] |
பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர் தமைப் புறமே பேசக் கூச்சு இலேன்; ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன்; நாச் சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணர மாட்டேன் ஏச்சுளே நின்று, மெய்யே என் செய்வான் தோன்றினேனே! | [6] |
தேசனை, தேசம் ஆகும் திருமால் ஓர் பங்கன் தன்னை, பூசனை, புனிதன் தன்னை, புணரும் புண்டரிகத்தானை, நேசனை, நெருப்பன் தன்னை, நிவஞ்சகத்து அகன்ற செம்மை ஈசனை, அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே! | [7] |
விளைக்கின்ற வினையை நோக்கி, வெண் மயிர் விரவி, மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன், இயல; வெள்ளம் திளைக்கின்ற முடியினான் தன் திருவடி பரவமாட்டாது இளைக்கின்றேன், இருமி ஊன்றி;-என் செய்வான் தோன்றினேனே! | [8] |
விளைவு அறிவு இலாமையாலே வேதனைக் குழியில் ஆழ்ந்து களைகணும் இல்லேன்; எந்தாய்! காமரம் கற்றும் இல்லேன்! தளை அவிழ் கோதை நல்லார் தங்களோடு இன்பம் எய்த இளையனும் அல்லேன்; எந்தாய்!-என் செய்வான் தோன்றினேனே! | [9] |
வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த துட்டனைத் துட்டுத் தீர்த்துச் சுவைபடக் கீதம் கேட்ட அட்ட மா மூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும் எள்-தனை எட்ட மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே! | [10] |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.079  
தம் மானம் காப்பது ஆகித்
பண் - திருநேரிசை (திருத்தலம் பொது -குறைந்த நேரிசை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே! | [1] |
மக்களே, மணந்த தாரம், வல் வயிற்று அவரை, ஓம்பும் சிக்குளே அழுந்தி, ஈசன் திறம் படேன்; தவம் அது ஓரேன்; கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும், இக் களேபரத்தை ஓம்ப, என் செய்வான் தோன்றினேனே! | [2] |
கூழையேன் ஆகமாட்டேன், கொடு வினைக் குழியில் வீழ்ந்து ஏழின் இன் இசையினாலும் இறைவனை ஏத்த மாட்டேன்; மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தை மார் தமக்கும் பொல்லேன் ஏழையேன் ஆகி, நாளும் என் செய்வான் தோன்றினேனே! | [3] |
முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்; பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன், பேதையேன் நான்; என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை என் உளே நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே! | [4] |
கறை அணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்; பிறை நுதல் பேதை மாதர் பெய் வளையார்க்கும் அல்லேன்; மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே! | [5] |
வளைத்து நின்று, ஐவர்கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய, தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல்-எரி மடுத்த நீரில்- திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல்-தெளிவு இலாதேன், இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே! | [6] |